திண்டிவனம் அருகே 13 வயது பள்ளி மாணவியை 4 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளம் மூலமாக வாலிபர்களுடன் பழகிய சிறுமி, அவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி கடந்த 14 ஆம் தேதி மாலை திடீரென காணாமல் போனதால், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் பல இடங்களில் தேடினர். மறுநாள், சிறுமி பட்டணம் கிராமம் அருகே நின்றுள்ளார். அவரிடம் விசாரித்தபோது, நான்கு வாலிபர்கள் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. உடனடியாக, சிறுமியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த விசாரணையில் ஊரல் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் (19), அவரது அண்ணன் திருநாவுக்கரசு (20), முரளி (23), பிரகலாதன் (24) ஆகியோர் சிறுமியை பலாத்காரம் செய்தது உறுதியாகியது. போலிசார் அவர்களை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.