
திருச்சூரில் படிக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் மூணாறுக்கு சுற்றுலா அழைத்து வந்தது. இந்த நிலையில் உணவு பிரேக்கர் பள்ளி பேருந்து நிறுத்தப்பட்ட போது நான்கு மாணவர்கள் மட்டும் தீப்பெட்டி தேடி கொண்டிருந்தனர். தீப்பெட்டி கிடைக்காததால் மாணவர்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு வெளியே பழைய கார் மற்றும் பைக் நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்து மப்டியில் இருந்த ஒரு போலீசாரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர்.
அதன் பிறகு சீருடையில் போலீசார் நிற்பதை பார்த்ததும் இரண்டு மாணவர்கள் அச்சத்தில் தப்பி ஓடிவிட்டனர். இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது ஒரு மாணவரிடம் 5 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி வாகனத்தில் அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் ஒரு கிராம் அளவுள்ள போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.