தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு என்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் கட்சிக்கொடியினை அறிமுகப்படுத்தினார். அவருடைய கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கட்சியாக பதிவு செய்துள்ளது. அதன் பிறகு இன்று நடைபெறும் முதல் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். காலை முதலே தொண்டர்கள் வர ஆரம்பித்த நிலையில் நடிகர் விஜய்யும் நேற்று இரவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட்டார். பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கிய நிலையில் ‌ பறை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

இந்நிலையில் நடிகர் விஜய் கொடியேற்றிய பிறகு அனைவரும் எழுந்து நின்று கொடிக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில் அவர் கட்சி கொடியை ஏற்ற போது மாநாடு திடலை அதிரும் அளவிற்கு கட்சியின் பாடல் ஒலித்தது. தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட வருகிறது. மேலும் நடிகர் விஜய் கொடி ஏற்றிய பிறகு தமிழுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியுள்ளனர். இதைத்தொடர்ந்து உறுதிமொழி எடுத்தனர். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை பாடலை நடிகர் விஜய்யும் இணைந்து பாடியுள்ளார். அவருடைய கொள்கை மத சார்பற்ற சமூக நீதி கொள்கையாகும். மேலும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.