நிர்வாக சீர்திருத்தம் அரசு மற்றும் தனியார் துறை அரசியல் தலையீடு என்பது எவ்வகையிலும் எவ்வடிவிலும் இருக்கவே கூடாது அந்த உறுதிப்பாட்டை நிலை நிறுத்தி லஞ்ச லாவண்யம் ஊழலற்ற நிர்வாகத்திற்கு வழி வகுக்கப்படும் ஜாதி மத மற்றும் பாலின சார்பின்மை அரசு நிர்வாகத்தில் வழிகாட்டும் வழிமுறைகளாக கடைபிடிக்கப்படும் அரசு நிர்வாகம் எப்போதும் முற்போக்கு சிந்தனை உடைய அரசியல் சார்ந்ததாக பன்முகை தன்மையுடனும் சட்ட மற்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறை படுத்தப்படும் அரசை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வசதிக்காக உயர் நீதிமன்ற கிளை அமைக்கப்படும் அமைக்கப்பட்டது போல தலைமைச் செயலகத்திலும் அதே போல அமைக்கப்படும் சமூக நீதி சமூக நீதி மதச்சார்பின்மை கோட்பாடுகள் செயல்படுத்தப்படும் சமதர்ம சமத்துவ கோட்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரான வர்ணாசிரம கோட்பாடுகள் எவ்வகையிலும் இருந்தாலும் அவற்றிற்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் சமமான விகிதச்சார இட பங்கீடு அளிக்கப்படும் ஜாதி மதம் மற்றும் மொழி வழி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான மற்றும் சகோதரத்துவ சூழலை பட்டியலின பழங்குடி மக்களை முன்னேற்றத்துடன் இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களுக்கு முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டிற்கு எப்போதும் ஏற்ற கொள்கை தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி வழிகாட்டும் மொழி என்பது உறுதி செய்யப்படும் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் தமிழை வழக்காடு மொழியாக உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சி கல்வி வரை கற்கலாம் தமிழ் மொழி கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிகம் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பல தமிழரின் வைகை நதி நாகரிகத்தை உலகிற்கு வெளிக்கொணர முன்னுரிமை அளிக்கப்படும் மாநில உரிமை மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆளுநர்கள் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பான நீடிப்பதால் ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்வி எழும்பியுள்ளது மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்.

படிப்படியாக 50 விழுக்காடு என்ற நிலை பெண்களுக்கு வழங்கப்படும் அனைத்து துறைகளிலும் வழங்கப்படும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும் பெண்கள் முதியோர் பாதுகாப்பிற்கு பெண்கள் பாதுகாப்பிற்கு தனி துறை உருவாக்கப்படும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது போல மாவட்ட தோறும் மகளிர் காண மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்கள் தனித்தனியாக அமைக்கப்படும் பகுத்தறிவு மற்றும் தீண்டாமை மனித குல அழிவிற்கு வழிவகுகின்ற உடல் மன குண நலனுக்கு கேடாக அமையும் அறிவியல் சாராத சிந்தனைகள் முற்றாக நிராகரிக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளை கொண்ட காமராஜர் மாதிரி அரசு பள்ளிகள் ஒன்று உருவாக்கப்படும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கான தளம் உயர்த்தப்படும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தனியாக அரசுப் பலகைகளை கழகம் உருவாக்கப்படும் மருத்துவம் மாவட்ட அளவில் அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தரம் உயர்த்தப்பட்டு அங்கே போதுமான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வசதிகள் உருவாக்கித் தரப்படும் புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்படும் விவசாய விற்பனை விலை மற்றும் நுகர்வோர் வாங்கும் நிலை இவற்றிற்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க அறிவியல் பூர்வமான முறை நடைமுறைப்படுத்தப்படும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் விவசாய நிலங்கள் மீட்டெடுக்கப்படும் அதிகாரி கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள் நீர் தேக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும்.

தமிழர்களின் மரபு வழி தொழிலாளர் பனைத் தொழில் மேம்படுத்தப்படும் ஆவின் பாலகங்களில் கருப்பட்டி பாலும் வழங்கப்படும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவிடப்படும் பள்ளி மாணவர்கள் மருத்துவ பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் சீருடைகள் நெசவாளர்கள் நேரடியாக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வாழ்வா மண்பாண்ட பானைகள் விடுதிகளில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்