
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் உள்ள அணை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் ஐந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் குறித்து பலுசிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர் ஷாஹித் ரிந்த் தெரிவித்தார்.