
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சூசைபுரம் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் சுப்பிரமணி(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதை கிராமத்தில் தோட்டம் ஒன்றை வைத்து உள்ளார். இந்நிலையில் இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டு உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது தோட்டத்திலிருந்து 4 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த 4 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா செடி பயிரிட்ட விவசாயியும் கைது செய்தனர்.