தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் கூல் சுரேஷ். இவர் பொதுவாக படங்கள் ரிலீஸ் ஆகும்போது ப்ரமோஷன் செய்வதற்காக வித்தியாசமான கெட்டப்பில் வருவார். இல்லையெனில் வித்தியாசமான செயல்களை செய்து கவனத்தை ஈர்ப்பார். அந்த வகையில் இன்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார்.

அதாவது திரு மாணிக்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக கூல் சுரேஷ் இதை செய்துள்ளார். அவர் சாட்டையால் அடிக்கும் போது படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோரின் பெயர்களை கூறினார். மேலும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்ட விவகாரம் பேசும் பொருளாக மாறிய நிலையில் ‌ தற்போது நடிகர் கூல்  சுரேஷ் அதே பாணியில் சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டுள்ளார்.