
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 26 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் 32.50 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மண்டல சீசனை விட 4.7 லட்சம் பக்தர்கள் அதிகமாக வந்துள்ளனர். இந்நிலையில் சபரிமலை சன்னிதானம் அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்ற ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் கொல்லூர் பகுதியை சேர்ந்த பிஜு என்பவர் சன்னிதானம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தான் பணிபுரிந்த ஹோட்டலில் மதுபானத்தை பதிக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்று அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த 4.5 லிட்டர் வெளிநாட்டு மது பானத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.