மத்திய அரசு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நடைமுறையில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களில் உள்ள வட்டி விகிதங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் 4-வது காலாண்டில் சிறு சேமிப்பு வட்டி விகிதம் குறித்து அறிவிப்பை நேற்று மத்திய அரசு வெளியிட்டது.

இந்நிலையில் சிறுசேமிப்பு வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முந்தைய காலாண்டில் இருந்த வட்டி விகிதம் தான் நீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 7.7 சதவீத வட்டியும், செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.2% வட்டியும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.5 சதவீத வட்டியும் நீடிக்கும். மேலும் இதன்மூலம் கடந்த 4 காலாண்டுகளாக வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.