
கன்னியாகுமரியில் கடல் நடுவே கண்ணாடி இலை பாலம் திறக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு நடந்து செல்ல இலவசமாக அனுமதிக்க அப்பட்டால் சுற்றுலா மேம்படும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். குமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது. அதன் அருகே மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இருக்கின்றது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இயக்கும் படகு கட்டணத்துடன் சேர்த்து பாலத்திற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க படலாம் என்ற தகவலும் பரவலாகி வருகின்றது.
இது குறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது, குமரியில் படகு சவாரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவை தான் மக்களை வெகுவாகம் கவர்ந்திழுகின்றன. படகு சவாரி செய்து கடல் நடுவே உள்ள பாறையை அடைவது தான் கன்னியாகுமரியில் தனித்துவ சுற்றுலாவாக உள்ளது கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகுமூலம் விவேகானந்தர் பாறைக்கும் சவாரி செல்ல ரூபாய் 75 வசூல் செய்யப்படுகின்றது. இதில் சிறப்பு வரிசை கட்டணமாக ரூபாய் 300 பெறப்படுகின்றது. இந்நிலையில் இந்த நுழைவு கட்டணம் எதுவும் வசூலிக்கா விட்டால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் கூறியதாவது, இந்த கண்ணாடி பாலத்தால் சுற்றுலா பயணிகள் மத்தியில் படகு சவாரி செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது. தற்போதைக்கு கட்டண உயர்வு எதுவும் இல்லை. வழக்கமாக திருவள்ளுவர் சிலை பராமரிப்புக்கு என படகு சவாரி கட்டணத்தில் நபர் ஒன்றுக்கு ரூபாய் 5 ஒதுக்கப்பட்டு வருகின்றது. கடல் சீற்றத்தால் அங்கு அடிக்கடி படகு சேவை ரத்தான நிலையில் பாலம் அமைக்கப்பட்டதால் அந்த குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்ணாடி இழை பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான படகு போக்குவரத்து கழகத்தில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.