பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகள் கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள் மீதான தாக்குதலாகும். கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையில் தன்னிச்சையாக யுஜிசி விதிகளில் திருத்தம் கொண்டு வருவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தமிழ்நாடு அரசு போராடும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கையில் தான் கல்வி இருக்க வேண்டுமே தவிர பாஜக அரசு நியமிக்கும் ஆளுநர்கள் கைக்கு போகக்கூடாது. நாட்டிலேயே உயர்கல்வியில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு இதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது என கூறியுள்ளார்.