நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது பாலியல் இச்சை வரும்போது பெற்ற தாய், மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று பெரியார் கூறியதாகவும், மது குடிக்காதே என்று சொல்வதும் கட்டிய மனைவியுடன் படுக்காதே என்று சொல்வதும் சமம் தான் என்று பெரியார் சொன்னதாகவும் கூறினார். அதோடு மது குடிக்காதே என்று சொல்லிவிட்டு ஆயிரம் தென்னை மரங்களை வெட்டிய பெரியார் பகுத்தறிவாளரா.? அவருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.? அவர் பேசியதுலாம் பெண்ணுரிமையா என்று கூறினார். இந்த பேச்சுக்கு தற்போது திமுக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,

தந்தை பெரியார் குறித்து மிகுந்த தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் சீமான்.

நாதக தொடங்குவதற்கு முன் தந்தை பெரியார் ஒருவர் தான் புரட்சியாளர் என பேசிய சீமான்
கட்சி ஆரம்பித்த பின் அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார். இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது இந்தியா முழுக்க சமூகநீதி அரசியலின் மீட்பர்களாக இருப்பவர்கள் தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் ஆவார்கள்.
அதுமட்டுமல்லாது, பார்ப்பனீய- ஆரிய எதிர்ப்பு அரசியலை வரலாற்றுத்தரவுகளோடு நிறுவியவர்களும் இவர்களே. ஆரியத்தை நிறுவ வேண்டுமானால் திராவிட அரசியலை நீர்த்துப்போகச்செய்ய வேண்டும். அதற்கான செயல் திட்டத்தை தமிழ்நாட்டில்
பாஜகவும் சங் பரிவார அமைப்புகளும் செயல்படுத்த தொடங்கி விட்டனர்.
அதனுடைய ஒரு பகுதி தான் சீமானை வைத்து தீவிரமாக்குகிறது
#RSS கும்பல். இதன் மூலம் தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்குவதே சங்பரிவாரக்கும்பலின் சதித்திட்டம். அச்சதிக்கான அசைன்மென்ட் சீமானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தந்தை பெரியார் குறித்து மிக மோசமாக தூற்றுகிறார்.
ஆரிய- பார்ப்பனியத்தின் அடிவருடியாக செயல்படும் சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.