தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 15ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதன்படி புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் காலையில் இடங்களில் பனிமூட்டம் நிலவுவதோடு உள்பகுதிகளில் வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை இன்று காலை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதோடு பனிமூட்டம் நிலவகூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.