
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வணங்கான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வணங்கான் படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அருண் விஜய் கூறியதாவது, கோட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் பாலாவுக்கு மிக்க நன்றி. ஒரு வார்த்தை கூட பேசாமல் அனைவரின் இதயத்தையும் வென்று விட்டோம். எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள் தான். எனக்குள் இவ்வளவு திறமை இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தி விட்டீர்கள். இதற்கு என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளேன் என் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.