கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கேரளாவைச் சேர்ந்த 30 வயதான பெண் வேலை பார்த்தார். ஆன்லைனில் வேறு வேலை குறித்து அந்த பெண் தேடி வந்தார். அப்போது மேக்கப் ஆர்டிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என ஒரு செல்போன் எண் போடப்பட்டிருந்தது. அதனை பார்த்த பெண் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறு முனையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் பேசி அந்த பணிக்கு போட்டிகள் அதிகம்.

எனவே ஏழு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என கூறினார். இதனால் அந்த பெண் சுரேஷ் கூறிய வங்கி கணக்குக்கு 6 லட்சத்தில் 12 ஆயிரத்து 540 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு சுரேஷ் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்தனர்.