
மத்திய அரசின் சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் முக்கியமான ஒன்றாகும். இத்திட்டத்தில் இணைய விரும்புவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தாதாரர்கள் தங்களது 60 வயது வரை பணம் செலுத்தி சேமிக்கவும் முடியும்.
அதோடு பயனர்கள் செலுத்தும் தொகையை அவர்களது 60 வயதிற்கு பிறகு ரூபாய் 100 முதல் 5000 வரை பென்ஷன் தொகை வழங்கப்படும். அதற்கு வங்கி கணக்கு அல்லது தபால் அலுவலக கணக்கு இருப்பது கட்டாயமானதாகும். இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 76 அல்லது காலாண்டுக்கு ரூபாய் 226 அல்லது அரையாண்டுக்கு ரூபாய் 449 செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.