
சென்னை வானிலை ஆய்வு மையம் தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் விலகுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். இதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளது. காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். இதே வானிலை தான் வருகிற 29ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் நீடிக்கும்.
இதைத்தொடர்ந்து ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 30 ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.