மராட்டியம் நாண்டெடில் உள்ள பகுதியில் பக்தர்கள் சிலர் ‘தாக்கூர் புவா’ புனித யாத்திரை சென்றனர். அப்போது நேற்று இரவு இவர்கள் உணவு சாப்பிட்டு உள்ளனர். அதன் பின் உணவு சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அனைவரின் உடல்நலம் தேறி வருவதாகவும், விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.