மத்திய பிரதேச மாநிலத்தில் மிஸ்ரோர் பகுதியில் வசித்து வந்தவர் ரவிகாந்த் வர்மா (35). இவர் ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரர். இவருக்கு ரேணு என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் ஒரு மகன் (6), ஒரு மகள் (2) உள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரவி காந்த் வர்மா போன் செய்து தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக கூறிவிட்டு போனை வைத்துள்ளார்.

அதன் பின்னர் ரவிக்காந்த் வர்மா தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். தகவலைக் கேட்ட மிஸ்ரோட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது ரவிகாந்த் வர்மா மற்றும் அவரது மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர்.

மற்றொரு அறையில் அவர்களது குழந்தைகள் அழுது கொண்டிருந்ததாக காவல்துறையினர் கூறினர். உயிரிழந்த ரவிகாந்த் வர்மா மற்றும் அவரது மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர், மனைவியை சுட்டுக்கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.