நாடே எதிர்பார்க்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

மாத சம்பளம் ரூ.1 லட்சம் வரை பெறுபவர்கள் இனி வருமான வரி கட்டத் தேவையில்லை. புதிய வரி விதிமுறைகளின்படி, வருமான வரி இத்தகையதாக இருக்கும்.

  • 12,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை.
  • 4,00,001 முதல் 8,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% ,
  • 8,00,001 முதல் 12,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10%,
  • 12,00,001 முதல் 16,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15%,
  • 16,00,001 முதல் 20,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20%,
  • 20,00,001 முதல் 24,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 25%,
  • 24,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கப்படும்.