தற்போது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில் அதன் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் மனிதர்களுடைய மூலையில் மைக்ரோ பிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறிக்கப்பட்டுள்ளது. இதில் நேச்சர் மெடிசின் என்ற ஆய்விதழில் வெளியிட்ட ஆய்வு கட்டுரையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் ரீஜன்ஸ் பேராசிரியரும் மருந்து அறிவியல் பேராசியருமான மேத்யூ குறிப்பாக, கடந்த 8 வருடங்களில் மனித மூளையில் மைக்ரோ பிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவது 50 சதவீதம் உள்ளது எனவும், சராசரியாக ஆய்வு செய்யப்பட்ட மூளை மாதிரிகளில் சுமார் 7 கிராம் மைக்ரோ பிளாஸ்டிக் இருந்ததாகவும், இது ஒரு பிளாஸ்டிக் ஸ்பூனின்  எடைக்கு சமம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை விட மூளையில் 7 முதல் 30 மடங்கு அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகவும், சராசரியாக 45 அல்லது 50 வயதுடைய நபர்களின் மூளை திசுகளில் ஒரு கிராமிற்கு 4,800 மைக்ரோகிராம்கள் மைக்ரோ பிளாஸ்டிக் இருந்தது என்றும் டிமென்சியா என்னும் மராத்திய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இதை விட 10 மடங்கு அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.