
திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா பாய் பிஜிலி சிங். இவருக்கு 88 வயது ஆகும் நிலையில் இன்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். இவருடைய கணவர் பிஜிலி சிங் கடந்த 1940 ஆம் ஆண்டில் இருட்டு கடையை தொடங்கினார். திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உலக பேமஸ்.
இவருடைய மறைவுக்கு பிறகு சுலோச்சனா உரிமையாளராக பொறுப்பேற்ற நிலையில் ஹரிசிங் என்பவர் தான் கடையை நடத்தி வந்தார். ஆனால் அவர் கொரோனா காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். மேலும் இந்த நிலையில் சுலோச்சனா தற்போது வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.