
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தாய்மொழி தான் கொள்கை மொழி. தொடர்பு மொழிக்கு ஆங்கிலம் உள்ளது. ஒரு மொழியை திணித்தால் இந்தியா பல நாடுகளாக மாறும்.
மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. விருப்பம் உள்ளோர் இந்தியை கற்றுக்கொள்ளட்டும். எதற்கு திணிக்க வேண்டும்? என விமர்சனம் செய்துள்ளார்.