டெல்லியின் தயால்பூர் பகுதியில் 65 வயதுடைய பெண் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சோனுவின் தாய் என்பது உறுதியானது.

ஓட்டுனராக வேலை பார்த்த அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தனது தாயுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபத்தில் சோனு தனது தாயை கொலை செய்து உடலை வீசி சென்றதுதெரியவந்தது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சோனுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.