
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மரப்பாலம் பகுதியில் திடீரென சாலையைக் கடந்த சிறுத்தை மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. வாகனம் மோதிய வேகத்தில் சிறுத்தை மயங்கியது. இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சிறுத்தை சிறிது நேரம் கழித்து எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராஜேஷ் என்பவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.