ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டிம் சௌதி கூறுகையில், 2023 ODI உலக கோப்பைகிரிக்கெட்  தொடரின் போது காயத்தால் கேன் வில்லியம்சன் விலகாமல் இருந்திருந்தால்  ராச்சின் ரவீந்திரநாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது.

எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது என்று கூறியுள்ளார். அறிமுக தொடரிலேயே மூன்று சதங்கள், இரண்டு அரை சதங்களை விளாசி நியூசிலாந்து அணியின் முன்னணி வீரராக உருவானவர் தான் ரச்சின் ரவீந்திரா.