சில சமயத்தில் உங்கள் கார் எந்த சுங்கச்சாவடியையும் கடக்காமல் வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் போதும், உங்கள் பாஸ்டேக் வாலட்டில் இருந்து பணம் எடுக்கப்படும். இதற்கு காரணம் சுங்கச்சாவடிகளில் தானியங்கி பாஸ்டேக் செயல்படாத போது, அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் வாகன எண்ணை உள்ளீடு செய்வார்கள். அப்போது தவறுதலாக உங்கள் வண்டியின் எண்ணை உள்ளீடு செய்தால், உங்கள் வாலட்டிலிருந்து பணம் எடுக்கப்படும். இதை தடுப்பதற்காக மத்திய நெடுஞ்சாலை துறை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சுங்கச்சாவடியை பயன்படுத்தாமலேயே உங்கள் வாலட்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் உடனே புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. நீங்கள் புகார் அளிக்க 1033 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனே மின்னஞ்சல் அனுப்பலாம். இதுகுறித்து விசாரித்து தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா என்பதை உறுதி செய்து அந்த கணக்கிற்கு மீண்டும் பணம் அனுப்பப்படும். மேலும் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியை நடத்துபவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.