சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் காலை நேரத்தில் பொதுவான பனிமூட்டம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதன்பிறகு வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது‌. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது மார்ச் 11ஆம் தேதி 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.