
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பரக்காசாலையில் 40 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 19 வயது இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். அதன் பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் அவருடைய பெயர் பிரேம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.