சென்னையில் பணிபுரியும் பெண்கள் தோழி விடுதியில் தங்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இணையதளம் மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” சென்னை அடையாற்றில் “தோழி விடுதிகள்” என்ற பெயரில் 2023 ஜூலை-13 அன்று 98 படுக்கை மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி சென்னையில் பணிபுரியும் பெண்களுக்காக தொடங்கப்பட்டது. 24 மணி நேர பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமராக்கள், பயோமெட்ரிக் வருகை பதிவு, காற்றோட்டமான அறைகள், இலவச வைஃபை வசதி, சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்து வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் தங்க ₹4,200 முதல் ₹6850 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த விடுதியில் தங்க விருப்பமுள்ள பணிபுரியும் பெண்கள் 94999 88009,94457 24179 என்ற கைப்பேசி எண்ணில் அல்லது இணையதளம் மூலம் தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.