
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் பாபு. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு பாபு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமை பற்றி சிறுமி கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் சிறுமியின் பெற்றோருக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபுவுக்கு ஆயுள் தண்டனையும், 16 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.