
மதுரை மாவட்டம் மகபூபாளையம் அன்சாரி நகர் ஏழாவது தெருவில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சமீப காலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.