
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது காளை மாடுகளை மாடுபிடி வீரர்கள் அடக்கியுள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை பார்வையாளர்களின் ஒருவரை முட்டி தூக்கி வீசியது.
இதனால் படுகாயமடைந்த நபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.