
கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து கல்லூரி மாணவி தவறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி பேருந்தில் இருந்து கீழே இறங்க முயன்றார். அதற்குள் டிரைவர் பேருந்தை எடுத்ததால் எதிர்பாராதவிதமாக மாணவி கீழே விழுந்து காயமடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.