தமிழ்நாட்டில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 1992 ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதம் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதம் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி மொத்தம் 40 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் 5 % முதல் 10 சதவீதம் வரை சுங்க கட்டணத்தை உயர்த்துமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுற்றரிக்கை அனுப்பிய நிலையில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.