காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன். இவர் ஒரு சிறந்த இலக்கியவாதியாவார். இவருக்கு 93 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாகவே சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குமரி ஆனந்தன் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர். இவருடைய சகோதரர் மறைந்த வசந்தகுமார். இவருடைய மகள் பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இவருடைய மறைவுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை… தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று…. பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்… இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்… குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்… அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக… தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு… தமிழிசை என்ற பெயர் வைத்து… இசை இசை… என்று கூப்பிடும் என் அப்பாவின்… கணீர் குரல்… இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது….

வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று… சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்… இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்… சீராக வாழ்வதைக் கண்டு… பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்… என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்…. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா… நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ… அதை மனதில் கொண்டு… உங்கள் பெயரில்… நாங்கள் செய்வோம் என்று… உறுதியோடு…

உங்களை வழி அனுப்புகிறோம்… உங்கள் வழி உங்கள் வழியில்…… நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்… போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்… நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்… என்று கூறியுள்ளார்.

மேலும் இதேபோன்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குமரி ஆனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.