
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் ஒரு பரபரப்பான தருணத்தில், ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்த ஒரு கேட்ச் திருப்புமுனையாக மாறக்கூடியதாக அமைந்தது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஸ்கொயர் லெக் பகுதியில் டைவு செய்து, ஜெய்ச்வால் ரஷித் அவரது ஸ்டைலில் அடித்த பந்தை லாவகமாக பிடித்து வெளியேற்றிய பீல்டிங் திறன் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அபாரமான பில்டிங் அது…
No-look shot from Rashid but Jaiswal saw that coming 🦅
🎥 Yashasvi Jaiswal pulls off a blinder to cut short Rashid Khan’s cameo 🩷
Updates ▶ https://t.co/raxxjzY9g7#TATAIPL | #GTvRR | @ybj_19 pic.twitter.com/VwRusWXkX0
— IndianPremierLeague (@IPL) April 9, 2025
“>
ஐபிஎல்லின் மிக திறமைசாலியான ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ரஷித் கான், துஷார் தேஷ்பாண்டே பந்தை ஸ்கொயர் லெக் பகுதியில் அடித்தார்… பாய்ந்து ஜெய்ஸ்வால் பிடித்த அந்த கடினமான கேட்ச் , குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன்களின்அளவை கட்டுப்படுத்தியது. மேலும் அந்தத் தருணம் ரசிகர்களிடையே பரபரப்பையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது.