
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த சேலம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.