இந்தியாவில் கார்ப்பரேட் துறையில் சமீபகாலமாக பணியிழப்பு சூழல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பாம்பே ஷேவிங் கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு தேஷ் பாண்டே கூறியதாவது, 40 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்கிற ஆபத்துக்கள் குறித்து இதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது 40 வயதினர் அதிகமான சம்பளம் பெறுவதால் நிறுவனங்கள் செலவு குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது முதலில் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் 40 வயதில் அவர்களுக்கு குடும்ப நிதி சுமை, குழந்தைகளின் கல்வி, பெற்றோர்களை கவனித்தல், EMI போன்ற பல்வேறு பொருளாதார தேவைகள் இருந்தாலும் சேமிப்பை மிகக் குறைவாகவே வைத்திருப்பர்.

இதனால் அவர்களுக்கு இது மாதிரியான சூழ்நிலை நிதி மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் தொழிலாளர்கள் தங்களை வேலையில் நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள AI  குளோனிங் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அதிக சேமிப்பையும் பராமரிக்க வேண்டும் என தேஷ் பாண்டே தெரிவித்துள்ளார். இவரது பதிவிற்கு இணையவாசி ஒருவர் பதிலளித்துள்ளார். அந்த பதிலில், 40-40 பிரச்சனை தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகரித்து வருகிறது. 40 வயதுக்கு மேல் மற்றும் 40 லட்சம் சம்பளம் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இருப்பவர்கள் ஜூனியர் வேலைகளுக்கு அதிக தகுதி உடையவர்களாகவும், நடுத்தர நிலை பதவிகளுக்கு மிக அதிக சம்பளம் வாங்குபவர்களாகவும் கருதப்படுகின்றனர். மேலும் இந்த வயதினர் இடையே AI,  ஆட்டோமேஷன் போன்ற புதிய திறன்கள் இல்லாத காரணத்தினால் இதுபோன்று பணி இழப்பு சூழல் ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார்.