
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ. 751.9 கோடு மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு ஏஜேஎல் நிறுவனம் எங்கு இந்தியா நிறுவனத்தை வாங்கியது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.