அமெரிக்காவின் சான் டியாகோ கவுண்டியில் நேற்று காலை ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அந்த பகுதியில் உள்ள சான் டியாகோ சூ மிருகக் காப்பகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் உள்ள ஆப்பிரிக்க யானைகள் கூட்டம், தங்களை பாதுகாப்பதற்காக இயற்கையான “அலர்ட் சர்கிள்” எனப்படும் வட்ட அணியை உருவாக்கி நின்ற காட்சி, பாதுகாப்பு நடத்தை மற்றும் விலங்குகளின் உணர்திறனை மிகச்சிறப்பாக காட்டுகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளதுடன், விலங்குகளின் நுண்ணறிவை பெருமைப்படைக்கும் விதமாக உள்ளது.

 

San Diego Zoo Wildlife Alliance தெரிவித்ததாவது, “யானைகள் தங்கள் கால்கள் வழியாக சத்தங்களை உணரக் கூடியவை. எதிர்பாராத நிலநடுக்கம் ஏற்பட்டதும், அவை உடனே பசுமாறுகளைச் சுற்றி வட்டமாக நின்றன. இது, யானைகளின் சமூகக் கட்டமைப்பையும், குழும ஒற்றுமையையும் காட்டுகிறது” என தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் Ndlula, Umngani, Khosi ஆகிய பெரிய யானைகள் மற்றும் Zuli, Mkhaya என்ற குட்டி யானைகள் ஆகியோராவர். நிலநடுக்கம் தணிந்த பின் யானைகள் சற்று நேரத்தில் வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்பினாலும், ஒரு சில நிமிடங்கள் ஒருங்கிணைந்த வகையில் அருகருகே இருந்தன என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.