
டெல்லியின் கரவால் நகர் பகுதியில் நடைபெற்ற ஒரு கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கோபத்தையும் வேதனையையும் கிளப்பியுள்ளது. சிவ் விகார், தெரு எண் 3-ல் ஒரு அடையாளமற்ற தெருநாயை சிலர் கம்பிகளால் அடித்து கொன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ “@shubham43264499” என்ற X கணக்கில் பகிரப்பட்டு பரவலாக வைரலாகி வருகிறது. எதற்காக இந்த வன்கொடுமை செய்யப்பட்டதென்றதும் இன்னும் தெரியவில்லை. சம்பவ இடத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் குற்றவாளிகளை அடையாளம் காண போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
@KapilMishra_IND ji aap dekhiye aapki constituency me kya ho rha hai.
— Help Voiceless Animals (@shubham43264499) April 15, 2025
இந்த கொடூர செயலுக்கு எதிராக வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான நடவடிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். “மவுனமாக இருக்கும் ஒரு உயிரினத்தை இப்படிப் படுகொலை செய்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என தெரிவித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டியதும், கரவால் நகர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவும் மத்திய அமைச்சருமான கபில் மிஸ்ரா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது வரை எந்தவொரு போலீஸ் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற தகவல்தான் வெளியாகியுள்ளது.