கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் சூரிய மண்டலத்திற்கு பின்னால் உயிர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கான உறுதியான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் சூரிய மண்டலத்திற்கு பின்னால் உயிர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கே12- 18பி என பெயரிடப்பட்டுள்ள கிரகத்தில் பூமியில் வாழும் நுண்ணுயிர்களால் உருவாக்கப்படும் 2 வாயுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கிரகம் நமது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதாகும். இந்த கிரகம் பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது தெரியவந்துள்ளது.