நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடலூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சரசு(58) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பொக்காபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே காட்டி யானை ஒன்று நின்று வாகனங்களை மறித்துள்ளது. இதையடுத்து சரசுவை அவரது கணவர் வாகனத்திலிருந்து இறங்க சொல்லிவிட்டு வாகனத்தை திருப்ப முயன்றார்.

அப்போது சரசுவை நோக்கி யானை வந்துள்ளது. இந்நிலையில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரது அருகில் வந்த யானை அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த சரசு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.