கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே பொய்குணம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பள்ளி வழக்கம்போல் செயல்பட்டு கொண்டிருந்தது. பள்ளியில் மாணவர்களுக்கு இடைவேளை விட்டபோது பள்ளி மாணவர்கள் பள்ளியின் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பள்ளியின் சுற்றுசுவரில் தேன்கூடு ஒன்று கலைந்து அதில் உள்ள தேனீக்கள் திடீரென பள்ளி மாணவர்களை கொட்டியுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து அனைத்து மாணவர்களும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.