உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை செந்தவர் நவ்ஷாத் அகமது (38). இவரது மனைவி ரஜியா. துபாயில் வேலை பார்த்த அகமது கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்தார். முன்னதாக ரஷ்யாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரூமான் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து அகமது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்த ரஜியா தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயா ரூமான் அவரது நண்பர் ஹிமான்ஷு ஆகியோர் இணைந்து அகமதுவை கொலை செய்துள்ளனர்.

அதன் பிறகு அவரது உடலை இரண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து 55 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்கவுலி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வீசிவிட்டு தப்பி சென்றனர். விவசாய நிலத்தில் மர்ம சூட்கேஸ் கடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த சூட்கேஸில் இருந்த டேக்கை வைத்து அகமதுவை போலீசார் அடையாளம் கண்டு விசாரித்தனர். அப்போது ரஜியா தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்தது உறுதியானது. இதனால் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.