ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீ நகருக்கு விரைந்து சென்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பஹல்கான் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதிவு உள்ளதாக தகவல் வெளியானதால் மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஜம்மு காஷ்மீரில் இன்று முழு அடைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லடாக்கிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுதிகள் உள்ளிட்டவற்றை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே இருக்கும் சுற்றுலா பயணிகள் தவிர புதிதாக வேறு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்கி உள்ளவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.