
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீ நகருக்கு விரைந்து சென்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பஹல்கான் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதிவு உள்ளதாக தகவல் வெளியானதால் மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காரணமாக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இன்றைய ஐபிஎல் போட்டியில் வீரர்கள் மற்றும் நடுவர்கள் கருப்பு கைப்பட்டை அணிய வேண்டும்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும். இன்று சியர் லீடர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் வாண வேடிக்கைகளும் நடத்தப்படக் கூடாது எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.