
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு வருகிற 24-ஆம் தேதி முடிவடைகிறது. 25-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகள் அனைத்தும் ஜூன் மாதம் 2-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.