ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 27  பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை செயலர்  விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும். பாகிஸ்தான் அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும் என விக்ரம் மிஸ்ரி பேட்டி அளித்துள்ளார்.